உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பகுதியை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். சரித்திரத்தையும், இந்தக்காலத்தையும் இணைத்து "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில் படமெடுத்தார் டைரக்டர் செல்வராகவன். கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படம், பெரிய அளவில் சர்ச்சையையும், பல்வேறு விமர்சனங்களையும் சந்தித்தது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளார் செல்வராகவன்.
இதுகுறித்து தனது ட்விட்டர் வலைதளத்தில் செல்வா கூறியிருப்பதாவது, , "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. படத்திற்கான கதை மொத்தமும் தயாராகிவிட்டது. கொஞ்சம் காலம் இடைவெளிவிட்டு இந்தப் படத்தை எடுக்கலாம் என்று எண்ணியுள்ளேன் என்று கூறியுள்ளார்.