'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

பர்மாவில் கலவரம் வெடித்தபோது அங்கிருந்து லட்சக்கணக்கான பேர் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்களில் நடிகை எஸ்.என்.பார்வதியும் ஒருவர். அவரது குடும்பம் பர்மாவில் வைர வியாபாரத்தில் கொடி கட்டி பறந்தது. கலவரத்தால் உயிர் பிழைத்தால் போதும் என்று கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு வந்தது எஸ்.என்.பார்வதி குடும்பம்.
அப்போது கையில் கொண்டு வந்திருந்த கொஞ்சம் வைரத்தை கொண்டு சென்னையில் வைர வியாபாரத்தை தொடங்கினார் எஸ்.என்.பார்வதியின் தந்தை. ஆனால் அதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டது. அப்பா, அம்மா, இரண்டு தங்கை, ஒரு தம்பி. அடுத்த வேளை உணவுக்கே சிக்கலான வாழ்க்கை.
எஸ்.என்.பார்வதியின் பக்கத்து வீட்டுக்காரர் சண்முகம், மேடை கச்சேரிகளில் பாடுகிறவர். அவர் இவர்களது வறுமையை கண்டு "பார்வதி அழகாக இருக்கிறாள். நாடகத்தில் நடிக்க என் நண்பருக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள் உங்கள் மகள் நடிக்க சம்மதித்தால் பணம் கிடைக்கும் உங்கள் கஷ்டம் தீரும்" என்றார். எஸ்.என்.பார்வதி நடிப்பதில் குடும்பத்தில் யாருக்கும் விருப்பம் இல்லை. என்றாலும் வறுமை அவரை நடிக்க வைத்தது. நிஜமான வைர நகைகள் போட்டு வலம் வந்த எஸ்.என்.பார்வதி கவரிங் நகைகள் போட்டு நடிக்க ஆரம்பித்தார்.
தீர்ப்பு கூறுங்கள் என்ற நாடகத்தில் நடிக்க ஆரம்பித்த எஸ்.என்.பார்வதி பிறகு பணம் தரும் பரிசு என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதன் பிறகு நூற்றுக் கணக்கான படங்களில் காமெடி நடிகையாகவும் குணசித்ர நடிகையாகவும் நடித்தார். மகள் நடிகையானதை தாங்கிக் கொள்ள முடியாமலேயே அவரது தந்தை இறந்து போனார்.




