தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்களம், கதை, மார்கண்டேயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள நிவேதிதா டிசம்பர்-1 என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிவேதிதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் மற்ற தனது நண்பர்களுக்காக அங்கு காத்திருந்திருக்கிறார். அப்போது இரவு 9 மணியளவில் கோவா கடற்கரையை சுற்றிப் பார்த்து திரும்பியிருக்கிறார். அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள் நிவேதிதாவை தவறான பெண் என்று கருதி அழைத்துள்ளனர். அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா அங்குள்ள சிறிய ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அது ஒரு பார் அங்கும் குடிபோதையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் நிவேதிதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தும் தப்பி அறைக்கு திரும்பிய மறுநாளே பெங்களூர் வந்து விட்டார். கோவாவில் தனக்கு நேர்ந்த கொடுமையை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார் நிவேதிதா.