பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது |
பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்களம், கதை, மார்கண்டேயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள நிவேதிதா டிசம்பர்-1 என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிவேதிதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் மற்ற தனது நண்பர்களுக்காக அங்கு காத்திருந்திருக்கிறார். அப்போது இரவு 9 மணியளவில் கோவா கடற்கரையை சுற்றிப் பார்த்து திரும்பியிருக்கிறார். அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள் நிவேதிதாவை தவறான பெண் என்று கருதி அழைத்துள்ளனர். அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா அங்குள்ள சிறிய ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அது ஒரு பார் அங்கும் குடிபோதையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் நிவேதிதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தும் தப்பி அறைக்கு திரும்பிய மறுநாளே பெங்களூர் வந்து விட்டார். கோவாவில் தனக்கு நேர்ந்த கொடுமையை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார் நிவேதிதா.