'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

பிரபல கன்னட நடிகை நிவேதிதா. தமிழில் போர்களம், கதை, மார்கண்டேயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள நிவேதிதா டிசம்பர்-1 என்ற படத்திற்காக சிறந்த நடிகைக்கான மாநில விருது பெற்றார்.
கடந்த 2 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நிவேதிதா. கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளார். அங்கு அறை எடுத்து தங்கிய அவர் மற்ற தனது நண்பர்களுக்காக அங்கு காத்திருந்திருக்கிறார். அப்போது இரவு 9 மணியளவில் கோவா கடற்கரையை சுற்றிப் பார்த்து திரும்பியிருக்கிறார். அப்போது போதையில் வந்த சில இளைஞர்கள் நிவேதிதாவை தவறான பெண் என்று கருதி அழைத்துள்ளனர். அவரது கையை பிடித்து இழுத்து கலாட்டா செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நிவேதிதா அங்குள்ள சிறிய ஓட்டலுக்குள் சென்றுள்ளார். அது ஒரு பார் அங்கும் குடிபோதையில் பலர் அமர்ந்திருந்தார்கள். அவர்களும் நிவேதிதாவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்தும் தப்பி அறைக்கு திரும்பிய மறுநாளே பெங்களூர் வந்து விட்டார். கோவாவில் தனக்கு நேர்ந்த கொடுமையை இப்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார் நிவேதிதா.