அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் |
தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக., எம்.எல்.ஏ.,க்கள் கூடி முடிவெடுத்த இந்த முடிவுக்கு அதிமுக.,வின் உண்மையான விசுவாசிகள் யாரும் ஆதரிக்கவில்லை. மேலும் சசிகலாவை முதல்வராக ஏற்க மக்களும் தயாராக இல்லை. தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ‛முதல்மரியாதை' பட புகழ் நடிகை ரஞ்சனி, சசிகலா தமிழக முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது... தமிழக மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன். சசிகலாவை போய் எப்படி முதல்வராக ஏற்பது. அம்மாவிடம் பணிப்பெண்ணாக இருந்தார் என்பதை தவிர அவருக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது. தமிழக மக்கள் முட்டாள் என மன்னார்குடி மாபியா நினைக்கிறதா...? இதை எதிர்த்து கண்டிப்பாக தமிழக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது.
அதிமுக., கட்சி மறைந்த நடிகரும், முதல்வருமான எம்ஜிஆர்-ல் துவக்கப்பட்டது, அதன்பின்னர் ஜெயலலிதா பொறுப்பேற்றார். சசிகலா முதல்வராக பதவியேற்பதை தமிழ் மக்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும். அதிமுக.,வை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும். ஜெயலலிதாவின் கடைசிநாளில் யாரையும் பார்க்க விடாமல் சசிகலா எப்படி தடுத்தார் என அனைவருக்கும் தெரியும். தமிழகத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும். ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஜனாதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.
இவ்வாறு நடிகை ரஞ்சனி காட்டமாக கூறியுள்ளார்.