ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இப்போது படம் எடுக்க வரும் புது இயக்குனர்கள் ஒரு நாளில் நடக்கும் கதை, பத்து மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதையெல்லாம் ஏதோ புதுமையான விஷயம் என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1976-ம் ஆண்டில் வெளிவந்த உறவாடும் நெஞ்சம் என்ற படம் 30 நிமிடத்தில் நடக்கும் கதையாக வந்தது.
கோடீஸ்வரன் வீட்டு மகன், ஏழை பெண்ணை காதலிப்பான். காதலுக்கு கோடீஸ்வர குடும்பம் எதிர்ப்பு தெரிவிப்பதால் சொத்து சுகம் வேண்டாம் என்று காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்வான். திடீரென மனைவிக்கு இருதய நோய் வர அவளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பான். அவள் குணமாகமாலேயே திரும்பி வருவாள். இங்கு கணவன் ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனையாக நிற்பான். இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த 30 நிமிடமே கதை. அதற்குள் உணர்ச்சி போராட்டம், பிளாஷ்பேக், காதல் எல்லாமே இருக்கும். ஆனால் கதை நடக்கும் நேரம் 30 நிமிடங்கள்தான். நல்ல கதையம்சமும் உணர்ச்சி பெருக்கும் கொண்ட இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
இந்தப் படத்தை தேவராஜ்-மோகன் என்ற இரட்டையர்கள் இயக்கி இருந்தார்கள். சண்முகப்ரியன் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். ஸ்ரீ விஷ்ணுப்பிரியா கிரியேஷன் சார்பில் கந்தசாமி, தேவராஜ்-மோகன் தயாரித்திருந்தார்கள். சிவகுமார், சந்திரகலா, ஜெய்சங்கர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார்.