துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
இப்போது படம் எடுக்க வரும் புது இயக்குனர்கள் ஒரு நாளில் நடக்கும் கதை, பத்து மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதையெல்லாம் ஏதோ புதுமையான விஷயம் என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1976-ம் ஆண்டில் வெளிவந்த உறவாடும் நெஞ்சம் என்ற படம் 30 நிமிடத்தில் நடக்கும் கதையாக வந்தது.
கோடீஸ்வரன் வீட்டு மகன், ஏழை பெண்ணை காதலிப்பான். காதலுக்கு கோடீஸ்வர குடும்பம் எதிர்ப்பு தெரிவிப்பதால் சொத்து சுகம் வேண்டாம் என்று காதலியை திருமணம் செய்து கொண்டு ஒரு மில்லில் வேலை செய்வான். திடீரென மனைவிக்கு இருதய நோய் வர அவளை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என்று சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பான். அவள் குணமாகமாலேயே திரும்பி வருவாள். இங்கு கணவன் ஒரு கொலை வழக்கில் தூக்கு தண்டனையாக நிற்பான். இருவரும் சந்தித்துக் கொள்ளும் அந்த 30 நிமிடமே கதை. அதற்குள் உணர்ச்சி போராட்டம், பிளாஷ்பேக், காதல் எல்லாமே இருக்கும். ஆனால் கதை நடக்கும் நேரம் 30 நிமிடங்கள்தான். நல்ல கதையம்சமும் உணர்ச்சி பெருக்கும் கொண்ட இந்தப் படம் வெற்றி பெறவில்லை.
இந்தப் படத்தை தேவராஜ்-மோகன் என்ற இரட்டையர்கள் இயக்கி இருந்தார்கள். சண்முகப்ரியன் கதை, திரைக்கதை எழுதியிருந்தார். ஸ்ரீ விஷ்ணுப்பிரியா கிரியேஷன் சார்பில் கந்தசாமி, தேவராஜ்-மோகன் தயாரித்திருந்தார்கள். சிவகுமார், சந்திரகலா, ஜெய்சங்கர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார்.