நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
பெரிய குளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன், அந்தக் காலத்திலேயே நிறைய படித்தவர். சென்னை தொலைபேசி துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தார். அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஒய்.ஜி.பார்த்சாரதி நடத்தி வந்த அமெச்சூர் நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார்.
நாடகத்தில் நடித்தவர்கள் சினிமாவில் நடிக்க சென்றபோது சுந்தர்ராஜனுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் வந்தது. பல போராட்டத்திற்கு பிறகு 1962ம் ஆண்டு வெளிவந்த பட்டினத்தார் படத்தில் சோழ ராஜாவாக ஒரு சில காட்சிகளில் நடித்தார். அதன் பிறகு சுந்தர்ராஜன் நடித்து வந்த சர்வர் சுந்தரம் நாடகம் திரைப்படமானபோது அந்த நாடகத்தில் அவர் நடித்த அப்பா வேடம் சினிமாவிலும் கிடைத்தது.
ஆரம்பத்தில் ஹீரோவாக நடிக்கும் ஆசையில் இருந்த சுந்தர்ராஜன் அப்பா வேடத்தில் நடிக்க தயங்கினார். அப்பா வேடத்தில் நடித்தால் தொடர்ந்து அப்பா வேடம்தான் கிடைக்கும் என்று நினைத்தார். "இந்த வேடம் உனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும்" என்று கே.பாலச்சந்தர் கூறியதை அடுத்து அதில் நடித்தார். சுந்தர்ராஜன் பயந்தது போலவே அடுத்து அவருக்கு வந்ததெல்லாம் அப்பா வேடங்கள்தான்.
அப்போதுதான் கே.பாலச்சந்தர் தான் இயக்கிய மேஜர் சந்திரகாந்த் படத்தில் சுந்தர்ராஜனை ஹீரோவாக்கினார். ஆனாலும் அதில் அப்பா வேடம்தான். கண்டிப்பான ராணுவ அதிகாரி கேரக்டரில் அவர் நடித்திருந்தார். தன் மகன்களே தவறு செய்தாலும் தண்டிக்கிற கேரக்டர். அதில் சுந்தர்ராஜனின் நடிப்பு பரவலான பாராட்டை பெற்றது. அன்று முதல் தொலைபேசி சுந்தர்ராஜன், மேஜர் சுந்தர்ராஜன் ஆனார். ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசும் தனித்துவமான ஸ்டைலால் புகழ்பெற்றார்.