உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
சினிமாவில் டான்சராக என்ட்ரி ஆனவர் பிரபுதேவா. பின்னர் டான்ஸ் மாஸ்டரான அவர், ஒரு கட்டத்தில் கதாநாயகன் ஆகி விட்டார். அதன்பிறகு படம் இயக்கத் தொடங்கியவர் சமீபகாலமாக இந்தி சினிமாவை கலக்கிக்கொண்டி ருக்கிறார். ஆனால் கிட்டத்தட்ட பதினோறு ஆண்டுகளுக்குப்பிறகு அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் தேவி படம் மூலம் மறுபிரவேசம் செய்கிறார். இந்த படத் தில் தமன்னா டைட்டீல் ரோலில் நடித்துள்ளார். வித்தியாசமான ஹாரர் கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
மேலும், இந்த படத்தில் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிரபுதேவாவும், தமன்னாவும் நடித்துள்ளனர். மொத்தம் 63 நாட்களில் இந்த படத்தை படமாக்கி முடித்துள்ளார் ஏ.எல்.விஜய். அதைப்பார்த்து ஆச்சர்யமடைந்துள்ளார் பிரபுதேவா. அதோடு, ஸ்பாட்டில் பல மொழி நடிகர் நடிகைகளும் நடித்து வர அவர்களிடம் மிகப்பொறுமையாக வேலை வாங்கினாராம் டைரக்டர் விஜய். முன்னணி நடிகரோ, புதுமுக நடிகரோ யாராக இருந்தாலும் அவர்கள் பல டேக் வாங்கினாலும் அதற்காக கோபம் காட்டாமல் பொறுமையாக படமாக்கினாராம். அதனால் நான் இந்த படத்தின் மூலம் விஜய்யிடமிருந்து பொறுமையை கற்றுக்கொண்டேன் என்று கூறும் பிரபுதேவா, படப்பிடிப்பு தளத்தில் நான் அவரை விஜய் என்று அழைக்கவில்லை மிஸ்டர் பொறுமைசாலி என்றுதான் அழைத்தேன் என்கிறார்.