பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து ஜூலை மாதம் தவறி விழுந்தார். இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கமலுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
இதனையடுத்து டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் கமல் தனது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டது. தனக்கு விருது கிடைத்ததற்கும் கமல், வாட்ஸ்ஆப்பில் ஆடியோ மூலம் நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தனது உடல்நிலை குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், நவம்பர் மாதம் முதல் எனது வேலைகளை தொடர்வதற்கு நான் உடல்தகுதியுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். அனைவரின் அன்பினால் விரைவில் குணமடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. அதே காதலுடன் நாயுடு, குண்டு மற்றும் பல படங்களின் வாயிலாக திரும்பி வருவேன் என தெரிவித்துள்ளார்.