ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
1984ம் ஆண்டு வெளிவந்த படம் நல்லவனுக்கு நல்லவன். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினி, ராதிகா ஹீரோ, ஹீரோயின். துளசி, மேஜர் சுந்தர்ராஜன், விசு, ஒய்.ஜி.மகேந்திரன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்தப் படம் ஒரு தொழிலாளியின் கதை. ரஜினி தாதாவாக இருந்து பின்பு மனம் திருந்தி தொழிலாளியாக வேலை செய்வார். நஷ்டத்தில் இயங்கிய தொழிற்சாலையை லாபமாக மாற்றுவார். ஆனால் முதலாளி மகன் குடியும் குடித்தனமுமாக இருந்து கேட்பார் பேச்சு கேட்டு தொழிலாளர்களை எதிர்ப்பார் துரோகியின் பேச்சை கேட்டு அப்பாவின் சொத்துக்களை எழுதி வாங்குவார். பின்பு அந்த துரோகிகளே அவரை தீர்த்துக்கட்டி சொத்துக்களை அபகரிக்கும்போது ரஜினி அவரை காப்பாற்றுவது கதை.
இந்த கதையில் முதலாளி மகனாக ஒரு ஹீரோவை நடிக்க வைத்தால் புதுமையாக இருக்கும் என்று கருதிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அப்போது கொஞ்சம் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த கார்த்திக்கை அணுகினார். அவரோ கோடி ரூபாய் கொடுத்தாலும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
ஆனால் ஏவிஎம். சரவணன் கார்த்திக்கிடம் பக்குவமாக பேசினார் "நீங்கள் நல்லவர்தான் மற்றவர்கள் உங்களை தவறாக வழிகாட்டி கெட்டவனாக்குகிறார்கள். அதனால் நீங்கள் வில்லன் இல்லை. கடைசியில் திருந்தியும் விடுகிறீர்கள். அதனால் இது பாசிட்டிவான கேரக்டர்தான். அதோடு இந்தப் படத்தில் நீங்கள் நடித்தால் அடுத்து உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கிறோம். அந்தப் படத்தையும் எஸ்.பி.முத்துராமன் இயக்குவார்" என்று வாக்களித்தார். அதன் பிறகே கார்த்திக் நல்லவனுக்கு நல்லவனில் நடித்தார்.
நல்லவனுக்கு நல்லவன் வெற்றிப்படடமாக அமைந்து 150 நாட்கள் ஓடியது. ஏவிஎம் சரவணன் சொன்ன மாதிரி ஏவிஎம் தயாரிப்பில் நல்லதம்பி படம் தயாரிக்கப்பட்டது. அதனை எஸ்.பி.த்துராமனே இயக்கினார். நல்லவனுக்கு நல்வவன் படத்திற்கு பிறகு கார்த்திக் வில்லனாக நடித்த படம் அனேகன்.