பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார் செல்வராகவன். அதையடுத்து அவர்கள் புதுப்பேட்டை-2வில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தனுஷ் வெவ்வேறு டைரக்டர்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் ஆர்யாவை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதையடுத்து கான் படத்தை சிம்பு வைத்து இயக்கினார். அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் செல்வராகவன். அப்போது அங்கு கூடியிருந்த தனுஷின் ரசிகர்கள் அவரிடத்தில், புதுப்பேட்டை-2 எப்போது? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் திரும்பத்திரும்ப கேட்ட அந்த கேள்வி வந்த திசையை நோக்கி திரும்பித்திரும்பி பார்த்தாரே தவிர, அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை செல்வராகவன். ஆனால் அவரது மெளனத்தை அடுத்து தனுஷாவது புதுப்பேட்டை-2 கேள்விக்கு பதில கொடுப்பாரா? என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் அவரும் அந்த படம் குறித்து ஒருவார்த்தைகூட பேசவில்லை. புதுப்பேட்டை-2 உருவாக சான்சே இல்லை என்பது போலவே அவர்களின் மெளன புரட்சி இருந்தது.