Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெளனம் சாதித்த தனுஷ்-செல்வராகவன்!

20 ஜூன், 2016 - 09:16 IST
எழுத்தின் அளவு:
pudhupettai-2-again-with-the-same-combo-of-dhanush-and-selvaraghavan

தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார் செல்வராகவன். அதையடுத்து அவர்கள் புதுப்பேட்டை-2வில் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், தனுஷ் வெவ்வேறு டைரக்டர்களுக்கு கால்சீட் கொடுத்து விட்டதால் ஆர்யாவை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதையடுத்து கான் படத்தை சிம்பு வைத்து இயக்கினார். அப்படம் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.


இந்த நிலையில், சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள தொடரி படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் செல்வராகவன். அப்போது அங்கு கூடியிருந்த தனுஷின் ரசிகர்கள் அவரிடத்தில், புதுப்பேட்டை-2 எப்போது? என்று கேள்வி எழுப்பினார். ஆனால், அவர்கள் திரும்பத்திரும்ப கேட்ட அந்த கேள்வி வந்த திசையை நோக்கி திரும்பித்திரும்பி பார்த்தாரே தவிர, அதுகுறித்து எந்த பதிலும் சொல்லவில்லை செல்வராகவன். ஆனால் அவரது மெளனத்தை அடுத்து தனுஷாவது புதுப்பேட்டை-2 கேள்விக்கு பதில கொடுப்பாரா? என்று எதிர்பார்த்தனர் ரசிகர்கள். ஆனால் அவரும் அந்த படம் குறித்து ஒருவார்த்தைகூட பேசவில்லை. புதுப்பேட்டை-2 உருவாக சான்சே இல்லை என்பது போலவே அவர்களின் மெளன புரட்சி இருந்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)