பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வாகை சூடவா, மெளனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் நடித்த இனியா, மாசாணி படத்திற்கு பிறகு மார்க்கெட்டில் ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்கிற நிலைதான் இருந்தது. ஆனால், அந்த படம் தோல்வியடைந்ததால் பின்னர் அவரது மார்க்கெட்டில் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் இப்போது கேரக்டர் நடிகையாகி விட்டார். தற்போது வைகை எக்ஸ்பிரஸ், பொட்டு உள்பட பல படங்களில் வித்தியாசமான கேரக்டர் களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், ஆரம்பத்தில் தனக்காக மேனேஜர் வைத்திருந்த இனியா, இப்போது கால்சீட், சம்பளம் என அனைத்து விசயங்களையும் தானே டீல் பண்ணுகிறார். அதேசமயம், கேரக்டர் வேடங்களில் நடித்தாலும் இந்த அளவுக்கு சம்பளம் வேண்டும் என்று உழைப்புக்கேற்ற கூலியை தாராளமாக கேட்டு வாங்குகிறார் இனியா.
அதோடு, எந்த அவுட்டோருக்கு சென்றாலும் அங்குள்ள கோயில், தேவாலங்களுக்கு சென்ற வழிபடுகிறாராம் இனியா. தன்னை ஆச்சர்யமாக பார்ப்பவர்களிடம், எனது அம்மா பெயர் சாவித்ரி அவர் இந்து மதத்தைச்சேர்ந்தவர். அப்பா சலாகுதீன் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இப்போதுவரை அவரவர் மதத்தை அவரவர் பின்பற்றி வருகின்றனர். அவர்களுக்குள் எந்தவித பிரச்சினையும் ஏற்பட்டத்தில்லை. மனம் ஒன்றி வாழ்கிறார்கள். ஆக, அதைப்பார்க்கையில் எனக்கு கடவுளை பிரிக்க முடியவில்லை. எல்லா கடவுளும் ஒன்றுதான் என்பது எனது புரிதலாகி விட்டது. எல்லாவற்றுக்கும் மனசுதான் காரணம். அதனால் எம்மதமும் சம்மதம் என்கிற மனநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிறாராம் இனியா.