பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சமீபகாலமாக அஜித்தான் தனது படங்களுக்கான தலைப்பை அறிவிக்காமலேயே படப்பிடிப்பை தொடர்ந்து வருகிறார். அதன்காரணமாக அவரது ரசிகர்கள் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று மண்டையைப் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள். அதையடுத்து அவர்களாகவே ஒரு டிசைன் செய்து தல படத்தின் தலைப்பு இதுதான் என்று இணையதளங்களில் ஆளுக்கொரு தலைப்பாக வைத்து பப்ளிசிட்டியும் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். அதன்பிறகுதான் இனியும் விட்டால், ரசிகர்கள் ரொம்ப டென்சனாகி விடுவர்கள் என்று கடைசி நேரத்தில் டைட்டீலை அறிவித்து வருகிறார் அஜித். அந்த வகையில், வீரம் படத்தை தவிர, ஆரம்பம், என்னைஅறிந்தால் , வேதாளம் ஆகிய படங்களுக்கு அதிக தாமதமாகவே தலைப்பை வெளியிட்டார் அஜித்.
ஆனால், விஜய் படங்களைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே டைட்டில் வைத்துதான் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். ஆனால், இப்போது விஜய்யும் அட்லி இயக்கத்தில் நடித்து வரும் தனது 59வது படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காமல் இழுத்தடித்து வருகிறார். விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்காக இதற்கு முன்பு விஜயகாந்த், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் போலீசாக நடித்த பல படங்களின் டைட்டில்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனபோதும், இன்னும் இதுதான் படத்தின் டைட்டில் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.