பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மாற்றான், அனேகன் என இரண்டு படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த்.
இரண்டு படங்களுமே வெற்றியடையவில்லை.
ஆனாலும் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறார் கல்பாத்தி அகோரம்.
'அனேகன்' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது.
பிறகு, விஷால் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அதன் பிறகு தனி ஒருவன் வெற்றியடைந்ததால் 'ஜெயம்' ரவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இப்படி மாறி மாறி வெளிவந்த தகவல்களைப் பார்த்து வெறுத்துப்போன இயக்குநர் கே.வி.ஆனந்த், இந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்து வந்தார்.
அதோடு, எனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்த பிறகே ஹீரோ யார் என்பதை முடிவு செய்வேன் என்றும் கூறியிருந்தார்.
லேட்டஸ்ட் தகவல் என்ன?
தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டார் கே.வி.ஆனந்த்.
அந்த கதைக்கு ஆர்யா, விஷால், ஜெயம்ரவி பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதால் தன்னுடன் 'கோ' படத்தில் இணைந்த ஜீவாவையே ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் கே.வி.ஆனந்த்.
அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது முடிவுபெற்றுள்ளநிலையில், இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.