Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மீண்டும் ஜீவா

31 அக், 2015 - 03:15 IST
எழுத்தின் அளவு:
Again-Jeeva-acts-in-K.V.Anandh-direction

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் மாற்றான், அனேகன் என இரண்டு படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த்.

இரண்டு படங்களுமே வெற்றியடையவில்லை.


ஆனாலும் மூன்றாவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறார் கல்பாத்தி அகோரம்.


'அனேகன்' படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார் என்று முதலில் தகவல் வெளியானது.


பிறகு, விஷால் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.


அதன் பிறகு தனி ஒருவன் வெற்றியடைந்ததால் 'ஜெயம்' ரவி நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது.


இப்படி மாறி மாறி வெளிவந்த தகவல்களைப் பார்த்து வெறுத்துப்போன இயக்குநர் கே.வி.ஆனந்த், இந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று மறுத்து வந்தார்.


அதோடு, எனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்த பிறகே ஹீரோ யார் என்பதை முடிவு செய்வேன் என்றும் கூறியிருந்தார்.


லேட்டஸ்ட் தகவல் என்ன?


தனது அடுத்த படத்திற்கான கதையை ரெடி செய்து விட்டார் கே.வி.ஆனந்த்.


அந்த கதைக்கு ஆர்யா, விஷால், ஜெயம்ரவி பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்பதால் தன்னுடன் 'கோ' படத்தில் இணைந்த ஜீவாவையே ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் கே.வி.ஆனந்த்.


அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் தற்போது முடிவுபெற்றுள்ளநிலையில், இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)