Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் காணாமல்போன கிஷோர்... மலையாளத்தில்

09 செப், 2015 - 10:11 IST
எழுத்தின் அளவு:
Kishore-in-Malayalam-movie

சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த நடிகர் பசுபதி சில கொள்கைகளை வைத்திருக்கிறார். அந்த கொள்கையின்படிதான் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்வார்.


இந்த கொள்கையின் காரணமாகவே பசுபதி காணாமல் போனார். பசுபதியைப்போலவே கொள்கையின் காரணமாக காணாமல்போன மற்றொரு நடிகர் கிஷோர். பொல்லாதவன், வெண்ணிலா கபடிக் குழு ஆடுகளம் உட்பட பல படங்களில் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்தார். தமிழ் படங்கள் மட்டுமின்றி சில தெலுங்கு, கன்னட, மலையாள படங்களில் நடித்துள்ள கிஷோர் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அவரை அதிகம் காணமுடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் கிஷோர். அந்த படத்தின் பெயர் புலி முருகன். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார் கிஷோர். இப்படத்தில் மிருகங்கள் நடமாடும் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழும் முருகன் என்ற முரட்டு கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.


அந்த காட்டில் வில்லத்தனம் செய்யும் ஃபாரஸ்ட் அதிகாரியாக கிஷோர் நடிக்கிறார். அவுட்லைனைப் பார்த்தால் சந்தன வீரப்பன் கதை மாதிரி இருக்கே...

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)