பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சிறந்த நடிகர் என்று பெயர் எடுத்த நடிகர் பசுபதி சில கொள்கைகளை வைத்திருக்கிறார். அந்த கொள்கையின்படிதான் படங்களில் நடிக்கவே ஒப்புக்கொள்வார்.
இந்த கொள்கையின் காரணமாகவே பசுபதி காணாமல் போனார். பசுபதியைப்போலவே கொள்கையின் காரணமாக காணாமல்போன மற்றொரு நடிகர் கிஷோர். பொல்லாதவன், வெண்ணிலா கபடிக் குழு ஆடுகளம் உட்பட பல படங்களில் சிறப்பாக நடித்து கவனத்தை ஈர்த்தார். தமிழ் படங்கள் மட்டுமின்றி சில தெலுங்கு, கன்னட, மலையாள படங்களில் நடித்துள்ள கிஷோர் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தமிழில் அவரை அதிகம் காணமுடியவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்கிறார் கிஷோர். அந்த படத்தின் பெயர் புலி முருகன். மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கிறார் கிஷோர். இப்படத்தில் மிருகங்கள் நடமாடும் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தில் வாழும் முருகன் என்ற முரட்டு கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கிறார்.