உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
பாகுபாலிக்கு பிறகு உலக சினிமாவின் கவனம் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. பாகுபலியின் பட்ஜெட்டும், அது கொடுத்த வசூலும், உலக தரத்திற்கு நம்மாலும் சினிமா தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கையில் அடுத்து உலக புகழ்பெற்ற டைட்டானிக் படம்போன்ற ஒரு படத்தை தெலுங்கில் எடுக்க இருக்கிறார்கள். இதில் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.
1971ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தபோது பாகிஸ்தான் நாட்டுக்கு சொந்தமான பிஎன்எஸ் ஹாஜி என்ற நீர்மூழ்கி கப்பல் (அருகில் உள்ள படத்தில் இருப்பது) கடலில் முழ்கி அதில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். இந்த சம்பவத்தை கருவாக கொண்டு சங்கல்ப் என்ற இளைஞர் ப்ளூபிஷ் என்ற தலைப்பில் திரைக்கதை எழுதியுள்ளார். அதனையே படமாக்க உள்ளனர் இயக்குபவரும் சங்கல்ப் ரெட்டிதான்.
ராணா கப்பல் கேப்டனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இதற்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பல கோடி செலவில் நீர்மூழ்கி கப்பல் செட் போடப்படுகிறது. பெரும்பாலான காட்சிகள் நீர்மூழ்கி கப்பலுக்குள்ளேயே எடுக்கப்பட இருக்கிறது. 100 கோடி ரூபாய் செலவில் பிவிபி சினிமா தயாரிக்கிறது.