Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நயன்தாரா நடிக்காவிட்டால் பாடல்கள் இல்லாமல் படத்தை வெளியிடுவோம்: சிம்பு சொல்கிறார்

03 செப், 2015 - 04:31 IST
எழுத்தின் அளவு:
If-nayanthara-didnt-act-we-will-release-movie-without-song-says-Simbu

சிம்பு, நயன்தாரா நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார், குறளரசன் இசை அமைத்துள்ளார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அதன்பிறகு வாலு பட பிரச்னை, இசை அமைப்பில் தாமதம், சிம்புவின் வழக்கமான அக்கறையின்மை காரணமாக தாமதமானது.


இயக்குனர் பாண்டிராஜ், ''இது நம்ம ஆளு'' படத்தை விட்டு விட்டு அதன் பிறகு ''பசங்க 2'' படத்தை எடுத்து முடித்துவிட்டு விஷால் படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார். வாலு படப் பிரச்னை முடிந்து விட்டதால் இப்போது இது நம்ம ஆளு படத்தை விரைவாக முடித்து வெளியிட முடிவு செய்திருக்கிறார் சிம்பு. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி இருக்கிறது. அதை இயக்கித் தர இயக்குனர் பாண்டிராஜ் ஒப்புக் கொண்டாலும் நயன்தாரா ஒப்புக்கொள்ளவலில்லை. வேறு படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் டி.ராஜேந்தர், நயன்தாரா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கூறியதாக கூறப்பட்டது.


இதுகுறித்து சிம்பு கூறியிருப்பதாவது: நயன்தாரா பற்றி புகார் எதுவும் கொடுக்க வில்லை. அவர் இன்னும் இரண்டு பாடல் காட்சிகளில் நடித்து தரவேண்டும். அவரிடம் தேதி கேட்க யாரை அணுக வேண்டும் என்ற தெரியவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தை அப்பா அணுகி பாடலுக்கு தேதி வாங்கித் தாருங்கள். அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை உங்களிடமே கொடுத்து விடுகிறோம் என்று அப்பா சொன்னார். அதை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என்றார்கள். அதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் கடிதம் கொடுத்தோம். நயன்தாரா தேதி கொடுத்தால் பாடல்களை படம்பிடித்து படத்தில் சேர்ப்போம். இல்லாவிட்டால் பாடல்கள் இல்லாமலே படத்தை வெளியிடுவோம் என்றார் சிம்பு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)