Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்முறையாக ஓணம் பண்டிகை கொண்டாடிய சாய் பல்லவி..!

31 ஆக, 2015 - 01:42 IST
எழுத்தின் அளவு:
Sai-Pallavi-celebrates-Onam-in-first-time

மலையாள நடிகைகள் இங்குவந்து தமிழ்ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருவதுபோல, தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், மலையாள இயக்குனரால் மலையாளப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு மலையாள ரசிகர்களின் பாராட்டுக்களால் தொடர்ந்து லைம்லட்டிலேயே இருக்கிறார். அவர்தான் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த சாய் பல்லவி. படத்தில் லெக்சரராக நடித்திருந்த சாய் பல்லவி, முகபாவங்களில் மட்டுமல்லாது நடிப்பிலும் பின்னி பெடலெடுத்திருந்தார்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவரான சாய் பல்லவி,. டாக்டருக்கு படித்துவிட்டு, அடுத்ததாக மேல்படிப்புக்காக ஜார்ஜியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஓணம் பண்டிகை என்றால் இதுநாள் வரை இவர் கோவையில் தன்னுடன் படித்த கேரள மாணவிகளுக்கு ஓணம் வாழ்த்துச்சொன்னதோடு சரி.. அதன்பின் 'பிரேமம்' படத்தில் சில காட்சிகளில் நடித்து ஓணம் கொண்டாடியபொது அந்த பண்டிகை மீது ஆர்வம் ஏற்பட்டதாம்.. மேலும் இப்போது மலையாளிகள் அவரை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டதால், இந்தமுறை தனது வீட்டிலேயே ஓணம் பண்டிகையை தனது தங்கையுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)