பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
குழந்தை நட்சத்திரமாக தமிழ், தெலுங்கு படங்களில் நடித்தவர் ஸ்ரீதேவி. அதையடுத்து கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவை கலக்கியவர், ஒருகட்டத்தில் இந்திக்கும் சென்றவர், அங்கேயும் அதிக படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அப்படி சென்றவர் பாலிவுட் படதயாரிப்பாளர் போனிகபூரையே திருமணம் செய்து கொண்டு மும்பைவாசியாகி விட்டார்.அந்த வகையில் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக அவர் நடித்த கடைசி படம் நான் அடிமை இல்லை. அதையடுத்து இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ரீ-என்ட்ரியான ஸ்ரீதேவி, தற்போது புலி படம் மூலம் மீண்டும் நேரடி தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார். கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் அதிக நாட்கள் சென்னையில் முகாமிட்டு அப்படத்தில் நடித்துள்ளார் அவர்.மேலும், இனிமேல் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரீதேவி, புலி படத்தின் ஆடியோ விழா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டவர். செப்டம்பர் 6-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்றவுள்ள புலி தெலுங்கு பதிப்பில் ஆடியோ விழாவில் கலந்து கொள்கிறார்.அதோடு, 1986-லேயே தமிழ் சினிமாவை விட்டு வெளியேறிய ஸ்ரீதேவி, 1994வரை தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டை விட ஆந்திராவில் அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். அதனால் புலி படம் மூலம் ஆந்திர ரசிகர்களை சந்திக்கும் ஸ்ரீதேவி, இதையடுத்து முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் படங்களில் நடிப்பதிலும் தான் ஆர்வமாக இருப்பதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்.