Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“மோகன்லாலையும் என் அப்பாவையும் இணைத்து படம் இயக்குவது என் கனவு” - வினீத் சீனிவாசன்..!

31 ஆக, 2015 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Vineeth-Srinivasans-dream-movie

மலையாள சினிமாவில் எண்பதுகளில் மோகன்லால் - சீனிவாசன் கூட்டணி என்பது ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு சூப்பர் காம்பினேஷன். மோகன்லால், சீனிவாசனுக்கு இடையேயான ஒருவரை ஒருவர் காலைவாரிவிடும் கலாட்டாக்கள், அதேசமயம் அபரிமிதமான நட்பு ஆகியவை ரசிகர்களின் வயிற்றை பதம் பார்க்க தவறியதேயில்லை. குறிப்பாக 'காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட்', 'ஹலோ மை டியர் ராங் நம்பர்', 'நாடோடிகாட்டு', 'சித்ரம்' 'அக்கரே அக்கரே அக்கரே' என இவர்கள் கூட்டணியில் வெளியான சில படங்களை இன்றும் டிவியில் ஒளிபரப்பினால், சேனல் மாற்றாமல் பார்க்கும் ஆடியன்ஸ் இருக்கிறார்கள்.. கிட்டத்தட்ட 35 படங்களில் இணைந்து நடித்திருக்கிறது இந்த கூட்டணி.


ஆனால் கடந்த 2010ல் வெளியான 'ஒரு நாள் வரும்' என்கிற படத்திற்கு பின்னர் இந்த கூட்டணி இணையவே இல்லை.. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. தற்போது மலையாள சினிமாவின் நம்பிக்கை தரும் இளைய இயக்குனராக உருவெடுத்திருக்கும் வினீத் சீனிவாசன், மீண்டும் மோகன்லாலையும், தனது தந்தை சீனிவாசனையும் ஒன்றிணைத்து படம் இயக்கவேண்டும் என்றும், அதுதான் தனது கனவுப்படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளிலும் ஒருபக்கம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளதால் அடுத்த வருடத்தில் இது சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)