பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அட்டகத்தி, மெட்ராஸ் பட இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் தலைப்பு பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருக்கிறார்.
லிங்கா படத்தின் தோல்வியை தொடர்ந்து, ரஜினி, தனது வழக்கமான இயக்குநர்களின் படங்களில் நடிக்காமல், இளம்வயது இயககுநர்களின் படங்களில் நடித்தால் தான் துறையில் தாக்குபிடிக்க முடியும் என்பதை உணர்ந்தார். இதனையடுத்து, பல்வேறு இயக்குநர்களிடம் தொடர்ந்து கதைகேட்டு வந்தார்.
அட்டகத்தி மற்றும் மெட்ராஸ் படங்களின் மூலம் கோலிவுட்டில் முன்னணி இடத்திற்கு வந்துள்ள வெங்கட்பிரபுவின் உதவி இயக்குநர் பா. ரஞ்சித்திடம், ரஜினி கதை கேட்டார். அந்த கதை, ரஜினிக்கு பிடித்துப்போகவே, ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடிப்பதாக ஊடகங்களில் செய்தி பரவியது.
இதனிடையே, கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ரஞ்சித் - ரஜினி கூட்டணி உறுதியானவுடன், படத்தின் தலைப்பு குறித்த செய்தி வைரலாக பரவ துவங்கியுள்ளது. படத்திற்கு காளி அல்லது கண்ணபிரான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் ரெக்கைக்கொடி கட்டி பறக்க, கடந்த 17ம் தேதி, படத்திற்கு கபாலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் ரஞ்சித், டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ரஜினியின் புதிய படத்தின் தலைப்பை, ரசிகர்கள் கொண்டாட தயாராகிவந்த நிலையில், கபாலி என்ற பெயரை, நான் ஏற்கனவே என் படத்திற்கு வைத்துவிட்டதால், ரஜினி படத்திற்கு அந்த பெயரை வைக்க இயலாது என்று புதுமுக இயக்குநர் சிவக்குமார், தனது படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த போட்டோக்களுடன் அதிகாரப்பூர்வமாக புகார் செய்தார்.
ரஜினி படத்தின் தலைப்பு மாற்றப்படுமா அல்லது, சிவக்குமாரிடம் இருந்து கபாலி டைட்டில் பெறப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
தற்போது கபாலி தலைப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து தயாரிப்பாளர் தாணு, "தென்னிந்திய பிலிம் சேம்பரில் படத் தலைப்புக்கு என்று ஒரு பிரிவு இருக்கிறது. மூன்று தலைப்புகள் எழுதிக் கொடுத்து, இவை வேறு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்டோம். யாரிடமும் இல்லை என தெரிவித்தார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்டோம், அவர்களும் யாரிடமும் இல்லை என கூறினார்கள். அதற்குப் பிறகு தான் முறையாக பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட தலைப்பு தான் கபாலி. பின்னர், சிவகுமார் என்பவர் வந்து படத்தலைப்பு குறித்து பேசினார். அவர்களிடம் எங்களது தரப்பு நியாயத்தைச் சொன்னோம், பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்கள். தலைவர் எங்களது பெயரில் படம் பண்ணுவது சந்தோஷம் என்று சிவக்குமார் கூறிவிட்டதாக, தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.