பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழில் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய படங்களை இயக்கிய பிரபுதேவா, அதையடுத்து எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களையும் இயக்கினார். பின்னர் இந்திக்கு சென்றவர் அங்கு 100 கோடி வசூல் சாதனை படங்களாக கொடுத்து குறிப்பிடத்தக்க ஐந்து இயக்குனர்களில் தானும் ஒருவராக இடம்பிடித்தார். அதனால் அங்குள்ள முன்னணி ஹீரோக்களே பிரபுதேவா படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர்.
ஆனபோதும் சல்மான்கான் நடிப்பில் வாண்டட், அக்சய்குமார் நடிப்பில் ரவுடி ரத்தோர், கிரிஷ்குமார் நடிப்பில் ராமைய்யா வாஸ்தவாய்யா என வரிசையாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவருக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் ஜாக்சன் படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. அதனால் அதுவரை தென்னிந்தியா பக்கமே திரும்பிப்பார்க்காமல் இருந்து வந்த பிரபுதேவா, மெல்ல தெற்கு நோக்கி வரத் தொடங்கினார்.
அதன் முதல்கட்டமாக தற்போது பிரபுதேவா ஸ்டுடியோ என்ற பட நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் மூன்று படங்களை தயாரித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் தமிழில் படம் இயக்கும் ஆசையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர் ரீ-என்ட்ரியில் மீண்டும் விஜய்யை வைத்தே தனது முதல் படத்தை இயக்க ஆசைப்படுகிறாராம்.