பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பாகுபலி படம் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், ஹிந்தி மற்றும் மலையாளம் என உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளிவந்து வசூல் சாதனை செய்து வருகின்றது. விரைவில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் துவங்கவுள்ளன. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் தனது அபரிமிதமான வில்லன் நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த ராணா டகுபதி பாராட்டுகளையும் வாரி குவித்து வருகின்றார். நாயகன் பிரபாஸிற்கு இணையாக பால்லலா தேவா எனும் 50 வயது மதிக்க தக்க வில்லனாக அசத்திய ராணா இதனால் தனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கு காரணம் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் தான் காரணம் என்று கூறியுள்ளார். நடிகர் கமலஹாசன் நடித்த நாயகன் படத்தை பலமுறை தான் பார்த்துள்ளதாகவும் அப்படத்தில் கமல்ஹாசனின் உடல் மொழியும் நடிப்புமே, 30 வயதில் 50 வயது கதாபாத்திரத்தை ஏற்க தனக்கு தூண்டுகோலாக அமைந்ததாகவும் ரானா கூறியுள்ளார்.