பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
லக்ஷ்னா பிக்சர்ஸ் சார்பில் இமானுவேல், ரசீந்திரன் இணைந்து தயாரித்துள்ள படம் வல்லதேசம். என்.டி.நந்தா இயக்கியுள்ள இந்த படத்தில் அனுஹாசன், நாசர், எமித், டேவிட், பாலாசிங் உள்பட பலர் நடித்துள்ளனர். எல்.வி.முத்துக்குமாரசாமி, ஆர்.கே.சுந்தர் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னதாக, வல்லதேசம் பட டீம் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது வல்லதேசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுஹாசன் பேசும்போது, ஒவ்வொருத்தருமே தாங்கள் நடித்த படங்களின் ஆடியோ விழாக்களில், இந்த படத்தில் நான் ரொம்ப வித்தியாசமான கேரக்டர்ல நடிச்சிருக்கேன்னு சொல்லுவாங்க. ஆனா அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ எனக்கு தெரியாது. ஆனால் இந்த படத்துல நான் உண்மையிலேயே வித்தியாசமான கேரக்டர்லதான் நடிச்சிருக்கேன்.
இந்த படத்துல நடிப்பதற்கு முன்பு நான் லண்டனில் இருந்தேன். அப்போது இந்த படத்தோட டைரக்டர் நந்தா இந்த வல்லதேசம் புராஜக்ட்ல நடிப்பதற்கு என்னை அழைத்தார். அவர் யார் என்பதே தெரியாதபோதும், சரி போய்தான் பார்ப்போமே என்று அவரை மீட் பண்ணினேன். அவர் சொன்ன கதையும், எனக்கான கேரக்டரும் ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதனால என்னால நோ சொல்ல முடியல.
இதுல பெரிய சந்தோசம் என்னான்னா, 20 வருசத்துக்கு பிறகு நாசர் சாரோட நான் நடிக்கிறேன். என் அக்கா சுகாசினி மணிரத்னம் இயக்கிய இந்திராதான் எனது முதல் படம். அந்த படத்தில் எனக்கு ஜோடியாக அரவிந்த்சாமி நடித்திருந்தார். நாசர் சாரும் முக்கிய கேரக்டரில் நடித்தார். அந்த படத்துக்குப்பிறகு அவரோட நடிக்கிற சந்தர்ப்பம் கிடைக்கல. மேலும், அந்த இந்திரா படத்துல பார்த்த அனுஹாசன் வேற, இந்த படத்துல நடிச்சிருக்கிற அனுஹாசன் வேற. டோட்டல் வேற மாதிரியா இருக்கும். நான் ரொம்ப என்சாய் பண்ணி நடிச்ச கேரக்டர் இது. ரொம்ப நாளா நடிக்க ஆசையா இருந்த கேரக்டர் இது. இந்த மாதிரி வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவும் ஆசையாக இருக்கிறேன் என்றார் அனுஹாசன்.