முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா | ஆதவ் அர்ஜூனா, ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி சந்திப்பு ஏன்? | கூடுதலாக ஒரு காட்சி: அரசு உத்தரவால் சினிமாவுக்கு லாபமா? | 'முறைமாமன்'-ஐ ரீமேக் பண்ண ஆசை: சுந்தர்.சி, குஷ்பு மகள் அனந்திதா | 7 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பியுள்ள ஆன் ஷீத்தல் | ஒரு வழியாக திரைக்கு வருகிறார் 'இதயம் முரளி' | 'இனிய பொன் நிலாவே' பாடல் வழக்கு: இளையராஜா மறுஆய்வு மனு தள்ளுபடி | பிளாஷ்பேக்: வில்லனை நண்பன் ஆக்கியதால் தோல்வி அடைந்த ரஜினி படம் | பிளாஷ்பேக்: டைட்டிலால் தோல்வி அடைந்த எம்ஜிஆர் படம் | மகேஷ்பாபு குடும்பத்தினருடன் தியேட்டர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா |

தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, தாமரை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி மாதிரி ஒரு சிலரே இருக்கிறார்கள். தற்போது பார்வதி என்ற பாடலாசிரியை வேகமாக வளர்ந்து வருகிறார். வல்லினம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான பார்வதி, ஜில்லா படத்தில் எழுதிய "வெரசா போகையிலே... புதுசா போறவளே..." என்ற பாடல் மூலமும், அமராகாவியம் படத்தில் இடம்பெற்ற "ஏதேதோ எண்ணம் வந்து..." பாடல் மூலமும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் "கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்..." பாடல் மூலமும் புகழ் பெற்றார். தற்போது களம், கொளஞ்சி, உள்பட 8 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.
"பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களிலும் நடித்தும் டப்பிங் குரல் கொடுத்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பதில்லை. தூர்தர்ஷன் பொதிகையில் ஐந்து வருடங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். .
படிக்கும் போதே என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இப்படிக்கு நானும் நட்பும் வெளியிட்டேன். 2010-இல் என் இரண்டாம் கவிதைத் தொகுப்பான இது வேறு மழை யை வெளியிட்டேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சித்தேன். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நல்ல பாடல்கள் எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்கிறார் பார்வதி.




