அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் மிகவும் குறைவு, தாமரை, ஆண்டாள் ப்ரியதர்ஷினி மாதிரி ஒரு சிலரே இருக்கிறார்கள். தற்போது பார்வதி என்ற பாடலாசிரியை வேகமாக வளர்ந்து வருகிறார். வல்லினம் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமான பார்வதி, ஜில்லா படத்தில் எழுதிய "வெரசா போகையிலே... புதுசா போறவளே..." என்ற பாடல் மூலமும், அமராகாவியம் படத்தில் இடம்பெற்ற "ஏதேதோ எண்ணம் வந்து..." பாடல் மூலமும், திருமணம் என்னும் நிக்காஹ் படத்தில் "கண்ணுக்குள் பொத்தி வைத்தேன்..." பாடல் மூலமும் புகழ் பெற்றார். தற்போது களம், கொளஞ்சி, உள்பட 8 படங்களுக்கு பாடல்கள் எழுதி வருகிறார்.
"பிறந்து வளர்ந்தது சென்னையில். ஆங்கில இலக்கியம் படித்தேன். ஆங்கில இலக்கியம் பயின்றிருந்தாலும் சிறு வயதிலிருந்தே தமிழ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளேன். குறும்படங்களிலும் நடித்தும் டப்பிங் குரல் கொடுத்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக நடிப்பதில்லை. தூர்தர்ஷன் பொதிகையில் ஐந்து வருடங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். .
படிக்கும் போதே என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான இப்படிக்கு நானும் நட்பும் வெளியிட்டேன். 2010-இல் என் இரண்டாம் கவிதைத் தொகுப்பான இது வேறு மழை யை வெளியிட்டேன். அதற்குப் பிறகு திரைப்படங்களில் பாடல் எழுத முயற்சித்தேன். அந்த முயற்சிக்கு பலன் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து நல்ல பாடல்கள் எழுதி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம். என்கிறார் பார்வதி.