'கூலி' பற்றி ஆமிர்கான் எதுவுமே பேசவில்லை: அவர் தரப்பு விளக்கம் | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு | நம்நாடு, சந்திரமுகி, பார்க்கிங் - ஞாயிறு திரைப்படங்கள் | இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு |
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்விழா கவிஞர்கள் திருநாளாக நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் கவிஞர் சல்மா விருதும் பரிசும் பெற்றார். இவ்விழாவில் பேசிய கபிலன், தந்தை வைரமுத்துவை மேடையில் வைத்துக் கொண்டே அப்பா வழியில் தங்களால் செல்லமுடியாது என்றார்.
கபிலன் வைரமுத்து பேசும் போது "நாங்கள் அப்பாவின் பிறந்தநாள் விழாவை பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம். வழங்கப்படுகிற பரிசுப் பொருள்களையும் பார்த்து வருகிறோம் எல்லாமே மாறியுள்ளன. இப்போது தலைமுறை மாறிவிட்டது. போன தலைமுறையோடு இந்ததலைமுறை துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று உலக மயமாகி வணிக நிறுவனங்கள் ஒரே மாதிரியான இளைஞர்களை தயாரித்து வருகின்றன. அவர்களுக்கு நிதி முக்கியம் நிம்மதி முக்கியமில்லை. அறிவு முக்கியம் அன்பு முக்கியமில்லை.
அதனால் அப்பாவைப் பின்பற்றுவது என்பது முடியாத ஒன்றாக இருக்கிறது. அவருக்கு பேச்சுத்தமிழ் , எழுத்துதமிழ், கவிதைத்தமிழ் பாடல்தமிழ், மேடைத்தமிழ், விஞ்ஞானத் தமிழ் என்று பல தமிழ் நடைகள் இருக்கின்றன. இதை எல்லாம் எங்களால் பின்பற்ற முடியாது அவ்வளவு சிரமம். எனவே அவர் வழியில் நாங்கள் போக முடியாது." இவ்வாறு கபிலன் வைரமுத்து பேசினார்.
பிறகு பேசிய வைரமுத்து,என் பிள்ளைகளான உங்களுக்கு நான் விட்டுச் செல்கிற சொத்து பெரிதாக எதுவுமில்லை இந்த மனித உறவுகள்தான். இவர்களை அருகில் வைத்து உறவாடினால் அனைத்தும் கிடைக்கும். ஏனென்றால் மனிதர்களால் ஆனது தான் வாழ்வு" என்று அறிவுரை கூறினார்.