பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ்சினிமா வரலாற்றில் மிக குறுகிய காலத்தில் உச்சத்தைத்தொட்டவர் சிவகார்த்திகேயன். அடிப்படையில் மிமிக்ரி கலைஞனான சிவகார்த்திகேயன் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடினார். பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளரானார். சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து கொண்டே சினிமாவில் வாய்ப்பு தேடிய அவர் சின்ன சின்ன வேடங்களில் தலைகாட்டினாலே போதும் என நினைத்தார். வழக்கு எண் படத்தை பாலாஜி சக்திவேல் இயக்கிக் கொண்டிருந்தபோது அந்தப் படத்தில் காமெடி வேடம் கிடைக்குமா என வாய்ப்பு கேட்டார். இந்தப் படத்தில் சான்ஸ் இல்லை அடுத்தப் படத்தில் பார்க்கலாம் என்று சொல்லி அனுப்பினார் பாலாஜி சக்திவேல். அவருடைய அடுத்தப் படம் இன்னும் வெளிவரவில்லை. அதற்குள் சிவகார்த்திகேயன் உயரத்துக்கு சென்றுவிட்டார்.
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து காமெடி நடிகரானவர் பிறகு ஹீரோவாகி இன்றைக்கு பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டார். கோடி கணக்கில் செலவு செய்து சொந்தப்படம் எடுக்கும் அளவுக்கும் முன்னேறிவிட்டார்.
இந்நிலையில் அவரது புகழ்பாடும் ஆல்பம் ஒன்று விரைவில் வெளியாக இருக்கிறது. எங்க வீட்டுப்பிள்ளை என்று அந்த ஆல்பத்துக்கு பெயரிடப்பட்டிருக்கிறது. பிரகாஷ் பாஸ்கர் என்பவர் பாடல் எழுதி இந்த ஆல்பத்தை உருவாக்குகிறார்.