Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாம்பு பிடித்த சரத்குமார்

03 ஜூலை, 2015 - 11:15 IST
எழுத்தின் அளவு:
Sarathkumar-pick-the-snake

விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பை சினிமாவில் ஹீரோக்கள் படு ஸ்டைலாக பிடித்து வீராப்பு காட்டுவார்கள். ஆனால் சரத்குமார் நிஜ பாம்பை பொதுமக்கள் மத்தியில் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


நேற்று சரத்குமார் தி.நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலிருந்து தனது மனைவியின் தயாரிப்பு அலுவலககமான ராடான் டி.விக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற ரோட்டில் கடும் டிராபிக் ஜாம். என்னவென்று விசாரித்தார் சரத்குமார். சாலையோரத்தில் ஒரு பாம்பு கிடக்கிறது. அதனால் எல்லோரும் பயந்து நிற்கிறார்கள் சிலர் அதை அடித்துக் கொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.


இதைக் கேட்டதும் காரில் இருந்து இறங்கிய சரத்குமார் பாம்பு இருந்த இடத்துக்குச் சென்றார். ஒரு பொந்துக்குள் நுழைந்திருந்த பாம்பை ஒருவர் குச்சியால் குத்தி கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற சரத்குமார், அவரிடமிருந்த குச்சியை பிடுங்கி எறிந்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு பாம்பை பிடித்து வெளியே எடுத்தார். அது ஒரு பச்சை பாம்பு. பின்பு எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த புதருக்குள் அதை விரட்டி விட்டார். பின்னார் காரில் ஏறி அலுவலம் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)