பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஷப் பல் பிடுங்கப்பட்ட பாம்பை சினிமாவில் ஹீரோக்கள் படு ஸ்டைலாக பிடித்து வீராப்பு காட்டுவார்கள். ஆனால் சரத்குமார் நிஜ பாம்பை பொதுமக்கள் மத்தியில் பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நேற்று சரத்குமார் தி.நகரில் உள்ள தனது கட்சி அலுவலகத்திலிருந்து தனது மனைவியின் தயாரிப்பு அலுவலககமான ராடான் டி.விக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற ரோட்டில் கடும் டிராபிக் ஜாம். என்னவென்று விசாரித்தார் சரத்குமார். சாலையோரத்தில் ஒரு பாம்பு கிடக்கிறது. அதனால் எல்லோரும் பயந்து நிற்கிறார்கள் சிலர் அதை அடித்துக் கொல்ல முயற்சித்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதைக் கேட்டதும் காரில் இருந்து இறங்கிய சரத்குமார் பாம்பு இருந்த இடத்துக்குச் சென்றார். ஒரு பொந்துக்குள் நுழைந்திருந்த பாம்பை ஒருவர் குச்சியால் குத்தி கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தார். அருகில் சென்ற சரத்குமார், அவரிடமிருந்த குச்சியை பிடுங்கி எறிந்து விட்டு பொந்துக்குள் கைவிட்டு பாம்பை பிடித்து வெளியே எடுத்தார். அது ஒரு பச்சை பாம்பு. பின்பு எல்லோரையும் கலைந்து போகச் சொல்லிவிட்டு அருகில் இருந்த புதருக்குள் அதை விரட்டி விட்டார். பின்னார் காரில் ஏறி அலுவலம் சென்றார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.