Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“என்னையும் மலையாள நடிகையாகவே பார்க்கிறார்கள்” - நிக்கியின் பெருமிதம்..!

24 ஜூன், 2015 - 10:26 IST
எழுத்தின் அளவு:
All-are-seeing-me-as-malayalam-actress-says-Nikki-Galrani

கோயம்பேடு பஸ்ஸ்டாண்டுக்கு, அண்ணாநகர் டிப்போவில் இருந்து பேருந்துகளை கடன் வாங்கி ஓட்டுவதுபோல (என்னய்யா உதாரணம் இது.?) கேரள கதாநாயகிகளை வைத்துதான் பற்றாக்குறையை சமாளித்து வருகிறது நம் தமிழ்சினிமா.. சொல்லப்போனால் மும்பை, பெங்களூருவை விட அற்புதமான கதாநாயகிகளின் உற்பத்திக்கூடம் என்றால் அது மலையாள சினிமா என்று சொல்வதில் தவறேதும் இல்லை. அந்தவகையில் நம் தமிழ் ரசிகர்களும், மலையாள கதாநாயகிகள் யார் வந்தாலும் மனதார ஏற்றுக்கொள்கிறார்களே..!


அப்படித்தான் மலையாள சினிமாவில் இருந்து வந்த நிக்கி கல்ராணிக்கும் சூப்பர் வரவேற்பு அளித்து அவருக்கும் ஒரு நாற்காலியை போட்டுக்கொடுத்துவிட்டனர்.. நிக்கி கல்ராணியோ பெங்களூரை சேர்ந்தவர். ஆனால் கதாநாயகியாக அறிமுகமானதோ மலையாளத்தில் தான். அவரது முதல் இரண்டு படங்களும் (1983 மற்றும் ஓம் சாந்தி ஒசானா) மலையாளத்தில் தான் வெளியாகின. அதன்பின்னும் கூட மூன்று மலையாளப்படங்களில் நடித்து ரிலீஸும் ஆகிவிட்டன. இது அத்தனையும் கடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே நடந்துவிட்டது.


அதனால் கேரளாவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி.. தன்னை ஒரு மலையாளியாகவே பார்க்கிறார்கள் என்று பெருமிதப்படுகிறார் நிக்கி கல்ராணி. இத்தனைக்கும் 1983 படத்தில் நடிப்பதற்காக அவர் கேரளா வந்தபோது அவருக்கு தெரிந்த ஒரே வார்த்தை 'சேட்டா' என்பதுதான். இப்போது நிக்கி பேசுவது கூட உடைந்த மலையாளத்தில் தான். “மலையாள ரசிகர்கள் தான் என்னை பயமுறுத்தும் நீதிபதிகள்.. ஆனால் அவர்களே என்னை தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது எனக்கு சந்தோசம் தான்” என பூரிக்கிறார் நிக்கி கல்ராணி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)