பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் திருச்சியில் 10 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடந்து. இதில் விஷால் தன் தந்தை ஜி.கே.ரெட்டி, தாய் மற்றும் சகோதரி ஐஸ்வர்யா ஆகியோருடன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் அவர் மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
நான் விளம்பரத்திற்காக இந்த திருமணங்களை நடத்தி வைக்க வில்லை. எனது ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆற்றும் பணிகளில் இதுவும் ஒன்று. இதை பார்த்து மற்றவர்களும் செய்ய வேண்டும். இன்று திருமணம் செய்துள்ள அனைவரும் என் சகோதரிகள் அவர்களை மாப்பிள்ளைகள் கண்கலங்காமல் பார்த்துக் கொள்கிறார்களா என்பதை நானும் கவனித்துக் கொண்டிருப்பேன்.
சினிமாதான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. அதற்கு ஒரு நாளும் நான் துரோகம் செய்ய மாட்டேன். துரோகம் செய்பவர்களை விடவும் மாட்டேன். நடிகர் சங்க தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. பின்வாங்க மாட்டேன். நாடக நடிகார்களின் நிலையை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்காக பாடுபடுவேன்.
மதுரையில் நாடக நடிகர் சங்க கட்டிடத்துக்கு அடிக்கல்நாட்டு விழா விரைவில் நடக்கும்.
நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் வரை விஜயகாந்த் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் அரசியலுக்கு சென்றதும் சங்க பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். சரத்குமார் இதை புரிந்து கொண்டால் நல்லது. அரசியல் கட்சியில் இருப்பவர்கள் சங்கத்தில் இருந்தால் சங்கத்திலும் அரசியல் இக்கத்தான் செய்யும். நடிகர் சஙகத்திற்குள் அரசியலை நுழைய விடக்கூடாது. இவ்வாறு விஷால் பேசினார்.