பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
ஈ படத்துக்குப் பிறகு ஜீவாவும் நயன்தாராவும் திருநாள் என்ற படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் கும்பகோணம் பகுதியில் தொடங்கியது. ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில் நயன்தாரா தற்போது, இப்படக்குழுவுடன் இணைந்திருக்கிறார்.
இதற்கிடையில் அவரது புதிய காதல்கதையான இயக்குநர் விக்னேஷ் சிவன் உடனான காதல் விஷயம் மீடியாக்களில் பரபரப்பு செய்தியாகிவிட்டது.
விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் நெருக்கமாக உள்ள படங்கள் வெளியானதால் திருநாள் படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்கும் மக்கள் நயன்தாராவின் காதுபடவே கன்னாபின்னாவென கமெண்ட் அடிக்கின்றனராம். பொதுமக்களின் கமெண்ட்டை ஆரம்பத்தில் கண்டும்காணாமல் இருந்தாராம் நயன்தாரா. ஒரு கட்டத்தில் மக்களின் விசாரிப்பு அளவுக்கு அதிகமாகப்போனதால் கேரவன் உள்ளேபோய் உட்கார்ந்து கொள்கிறாராம். நயன்தாராவுக்கு ஏற்பட்ட பிரச்சனையை புரிந்து கொண்ட படப்பிடிப்புக்குழுவினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, பதிலுக்கு அவர்களும் ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. எனவே மக்கள் அடிக்கும் கமெண்ட்ஸை கண்டும் காணாததுபோல் இருக்கிறார்களாம் படக்குழுவினர்.