பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
காமெடியன்களுக்கு பாடிலாங்குவேஜ் முக்கியம். அவர்கள் திரையில் வந்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வர வேண்டும் என்பார்கள். ஆனால், அப்படி எந்த பாடி லாங்குவேஜூம் இல்லாமல் டயலாக் பேசியே ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. அவர் பாணியில் சந்தானமும் டயமிங் காமெடி மூலம் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.
இதற்கு முக்கிய காரணம், அவருக்குப்பின்னால் ஒரு பெரிய காமெடி இலாகாவே உள்ளது. அவர்கள்தான் சந்தானம் எந்த படத்தில் நடித்தாலும் அவருக்கான காட்சிகளை எந்த இடத்தில் எந்தமாதிரியான டயலாக்குடன் காட்சியை வைக்கலாம் என்று விவாதம் செய்து காட்சியமைக்கிறார்களாம்.
அந்த வகையில், நான் பேசும் ஒவ்வொரு டயலாக்கையும் எனக்கு பின்னாடி இருக்கிற காமெடி டீம்தான் உருவாக்கித்தருகிறார்கள். அதைத்தான் நான் பேசி நடிக்கிறேன் என்று சந்தானமே தற்போது ஓப்பனாக கூறி வருகிறார். அதோடு, இதுவரை நான் காமெடியில் யாரையும் இமிடேட் செய்யவில்லை என்று கூறிவந்த அவர் சமீபகாலமாக கவுண்டமணியின் காமெடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் என்னையுமறியாமல் அவரது பாணி எனது நடிப்பில் இருப்பதில் ஆச்சர்யமில்லை என்கிறார்.
மேலும், இப்படி காமெடியில் மற்ற காமெடியன்களின் சாயல் தனது நடிப்பில் இருந்தாலும், ஹீரோ வேசத்தைப் பொறுத்தவரை யாருடைய சாயலும் இல்லாமல் எனக்கென ஒரு பாணியை பின்பற்றுவேன் என்று கூறும் சந்தானம், தனது நடிப்பில் யாருடைய சாயலும் தெரிந்தால் அதை கண்டுபிடித்து சரி செய்துகொள்வதற்கும் தனது காமெடி இலாகாவை உஷார் பண்ணி வைத்திருக்கிறார்.