சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகை ஹன்சிகா ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்த வளர்த்து வருகிறார். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ஒரு குழந்தையை தத்தெடுப்பது அவரது வழக்கம். இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். ஆனால் வருகிற பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: எனக்கு விபரம் தெரியாத காலத்திலேயே என் பெயரில் என் அம்மா குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்து விட்டார். சினிமாவிற்கு வந்து நிறைய சம்பாதித்த பிறகு ஆரம்பித்த பணியல்ல இது. அதற்கு முன்பே தொடங்கியது. ஒரு வேளை நான் சினிமாவுக்கு வராமல் வேறு பணிக்கு சென்றிருந்தாலும் இதனை செய்திருப்பேன். எனது குழந்தைகளுக்காக மும்பை புறநகரில் ஒரு இடம் வாங்கியிருக்கிறேன். அதில் அவர்களுக்காக ஒரு இல்லம் கட்டப்போகிறேன். அதனால் இந்த ஆண்டு பிறந்த நாளின் போது 5 குழந்தைகளை தத்தெடுக்க இருக்கிறேன். எனது இந்த பணியை நான் விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. ஆனால் மீடியாக்கள் தோண்டி துருவி கண்டுபிடித்து வெளியிட்டு விடுகிறார்கள். அவர்கள் கேட்கும்போது மறைக்கத் தோணவில்லை. அதனால் சொல்ல வேண்டியது இருக்கிறது. என்கிறார் ஹன்சிகா.