பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தபோது அப்படத்தை தயாரித்தது பெரிய நிறுவனம் என்பதால் கதையைக்கேட்டு நடிப்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொண்டார் சந்தானம். ஆனால், இப்போது நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு விசயமும் சந்தானத்தின் ஆலோசனையின் பேரில்தான் நடைபெற்றுள்ளதாம். அதாவது, படத்தின் கதை மற்றும் காமெடிகளுக்கென மூன்று டீம் உருவாக்கி வைத்திருக்கும் சந்தானம், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காட்சியையும் தனது பார்வைக்கு வந்த பிறகே ஓகே செய்திருக்கிறார். அதோடு, பாடல்கள் விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டினாராம். அதனால் ஸ்பாட்டில் இருக்கும்போதே அவருக்கு டியூன்கள் அனுப்பப்பட்டு அவருக்கு பிடித்தமானதை மட்டுமே பாடல் பதிவு செய்திருக்கிறார்களாம்.அந்த வகையில், 5 டியூன்களையும் இசையமைப்பாளர் குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு போட்டு விட்டதால், ஒரு டூயட் பாடல் கண்டிப்பாக மெலோடியாக வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறாராம் சந்தானம். அந்த பாடலில் அவரும் ஆஷ்னா சவேரியும் ரொமான்டிக்காக நடனமாடியிருக்கிறார்களாம். அதனால் இந்த டூயட் பாடல் காமெடி நடிகர் என்ற இமேஜை விட்டு தன்னை ஹீரோ இமேஜ்க்கு மாற்றி விடும் என்றும் எதிர்பார்க்கிறாராம் சந்தானம்.