Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெலோடி பாடல் கேட்ட சந்தானம்!

20 மே, 2015 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Santhanam-wants-melody-songs

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தபோது அப்படத்தை தயாரித்தது பெரிய நிறுவனம் என்பதால் கதையைக்கேட்டு நடிப்பதோடு தனது எல்லையை நிறுத்திக்கொண்டார் சந்தானம். ஆனால், இப்போது நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்தில் ஒவ்வொரு விசயமும் சந்தானத்தின் ஆலோசனையின் பேரில்தான் நடைபெற்றுள்ளதாம். அதாவது, படத்தின் கதை மற்றும் காமெடிகளுக்கென மூன்று டீம் உருவாக்கி வைத்திருக்கும் சந்தானம், அவர்கள் சொல்லும் ஒவ்வொரு காட்சியையும் தனது பார்வைக்கு வந்த பிறகே ஓகே செய்திருக்கிறார். அதோடு, பாடல்கள் விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டினாராம். அதனால் ஸ்பாட்டில் இருக்கும்போதே அவருக்கு டியூன்கள் அனுப்பப்பட்டு அவருக்கு பிடித்தமானதை மட்டுமே பாடல் பதிவு செய்திருக்கிறார்களாம்.அந்த வகையில், 5 டியூன்களையும் இசையமைப்பாளர் குத்துப்பாட்டு ரேஞ்சுக்கு போட்டு விட்டதால், ஒரு டூயட் பாடல் கண்டிப்பாக மெலோடியாக வேண்டும் என்று கேட்டு வாங்கியிருக்கிறாராம் சந்தானம். அந்த பாடலில் அவரும் ஆஷ்னா சவேரியும் ரொமான்டிக்காக நடனமாடியிருக்கிறார்களாம். அதனால் இந்த டூயட் பாடல் காமெடி நடிகர் என்ற இமேஜை விட்டு தன்னை ஹீரோ இமேஜ்க்கு மாற்றி விடும் என்றும் எதிர்பார்க்கிறாராம் சந்தானம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)