தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
பிரபல எழுத்தாளரான தமயந்தி கடந்த சில வருடங்களாக திரைப்படத்துறையில் இயங்கி வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த தமயந்தி, பிரபல பண்பலை வானாலியில் சில வருடங்கள் பணியாற்றினார். பின்னர் பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றிவிட்டு திரைப்படங்களுக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தார். அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீராகதிரவன் தற்போது இயக்கி வரும் விழித்திரு படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் தமயந்தி.
விதார்த், கிருஷ்ணா, வெங்கட்பிரபு நடிக்கும் விழித்திரு படத்துக்கு பாடல் எழுதியதைத் தொடர்ந்து ஒரு இசைஆல்பத்துக்கும் பாடல் எழுதினார். தமயந்தி எழுதிய முதல் பாடல் இடம்பெற்றுள்ள விழித்திரு படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் தற்போது இரண்டாவது பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகர் இசையில் ஒருநாள் கூத்து என்ற படத்திற்கு பாடல் எழுதி உள்ளார். அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ் நடிக்கும் இப்படத்தை நெல்சன் வெங்கடேசன் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். திருடன் போலீஸ் வெற்றிப்படத்தை தயாரித்த கெனன்யா பலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது.