ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஜீ தமிழில் ஒளிபரப்பான நளதமயந்தி தொடரில் நந்தா, ப்ரியங்கா நல்காரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர். அந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், ப்ரியங்கா நல்காரிக்கு பதிலாக ஸ்ரீநிதி புதிய ஹீரோயினாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. இதனையடுத்து ப்ரியங்கா நல்காரி தான் சீரியலை விட்டு விலவில்லை, ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என்று ஷாக் கொடுத்தார். அதேபோல் ஸ்ரீநிதியும் தன்னை கெஸ்ட் ரோலில் நடிக்கத்தான் கூப்பிட்டார்கள் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இருவரில் யார் ஹீரோயினாக தொடரப் போகிறார்கள் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது சீரியலுக்கே எண்ட் கார்டு போட்டு முடித்து வைத்துவிட்டனர். அதிலும், தமயந்தி கதாபாத்திரம் இறந்ததது போல் ப்ரியங்கா நல்காரியின் புகைப்படத்துக்கு மாலையிட்டு கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கியுள்ளனர். இதைபார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள எண்ட் கார்டா? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.