பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கே முன்பு சிம்புவைக்கொண்டு கெளதம்மேனன் இயக்கி வந்த படம் சட்டென்று மாறுது வானிலை. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கெளதம்மேனனுக்கு அஜித் கிரீன் சிக்னல் கொடுத்ததால் சிம்பு நடித்த படத்தை நிறுத்தி விட்டு, என்னை அறிந்தால் படவேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன். ஆனால், என்னை அறிந்தால் ரிலீசானதுமே, சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு அச்சம் என்பது மடமையடா என்று பெயர் வைத்து படப்பிடிப்பை தொடங்கினார். அப்பட வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அதேசமயம், ஹீரோயினி போர்ஷன் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லையாம்.
காரணம், முன்பு அப்படத்துக்காக கால்சீட் கொடுத்திருந்த வட இந்திய நடிகை பல்லவி சுபாஷ் இப்போது வேறு சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதால் கெளதம்மேனனின் அழைப்புக்கு செவ்சாய்க்கவில்லையாம். அதனால், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம்.