Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மோகன்லால் நடித்த நாடகத்திற்கு தாதாசாகிப் பால்கே விருது..!

04 மே, 2015 - 12:26 IST
எழுத்தின் அளவு:
Mohanlals-play-won-DadaSaheb-Palke-award

அந்நிய நாட்டவரை இந்த மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என எதிர்த்து போராடிய மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் தான் குஞ்சாலி மரைக்காயர். அந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்கவேண்டும் என்கிற ஆர்வம் பல மலையாள இயக்குனர்களுக்கு இன்றும் உண்டு. ஆனால் நாடக வடிவில் அதற்கு முதலில் பிளையார் சுழி போட்டவர் பிரபல மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார்.


மலையாள சினிமாவில் 35 வருட சரித்திரம் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர்.. இவர்தான் குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகிறார். கடந்த ஜனவரியில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க நாள் விழாவில் கூட 'குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அரங்கேற்றினார். அதில் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடித்த அதிசயமும் அப்போது அரங்கேறியது..


ஏற்கனவே மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார், 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை படமாக்கப்போவதாகவும் கூட செய்திகள் அடிபட்டன. இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 5வது தாதாசாகிப் பால்கே விருதுக்கான திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான தாதாசாகிப் பால்கே விருதை பெற்றுள்ளது இந்த நாடகம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)