பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ்த் திரையுலகத்தை திருட்டு டிவிடி ஒரு பக்கம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் பேயும் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. எப்படியும் வாரத்திற்கு ஒரு படம் பேய்ப் படமாக வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த நிலை இருந்து வந்தாலும், சில படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதால் திரையுலகத்தினரும் பேய் சென்டிமென்ட்டை விடமாலே இருக்கிறார்கள்.
பொதுவாக முன்னணி நட்சத்திரங்கள் பேய்ப் படங்களில் நடிப்பதிலும், பேய்க் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதற்கு சில சென்டிமென்ட்டுகளும் காரணம். வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்பட்ட மோகன், 'உருவம்' என்ற பேய்ப் படத்தில் நடித்த பிறகு திரையுலகத்தில் காணாமல் போய்விட்டார். அதன் பின் அவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை.
இப்போது அந்த சென்டிமென்ட்டை உடைக்கும் விதத்தில் 'மாஸ்' படத்தில் சூர்யா, பேயாக நடித்திருக்கிறார். இன்று நள்ளிரவில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீசரின் கடைசியில் பேய்த் தோற்றத்தில் சூர்யா வந்து மிரட்டுகிறார். அழகான ஒரு ஹீரோ பேயாக நடித்திருக்கிறாரே என ஒரு பக்கம் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இப்போது அண்ணன் வழியில் தம்பி கார்த்தியும், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள 'காஷ்மோரா' படத்திலும் பேயாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.