பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு பிறகு மணிரத்னம் இயக்கிய படங்கள் அவருக்கு சரிவையே கொடுத்து வந்தன. ஆனால் தற்போது அவர் இயக்கி வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி ஹிட்டாக அமைந்து, மணிரத்னத்துக்கு பெரிய உற்சாகமாக அமைந்திருக்கிறது. அதனால் இனி வெற்றிகளை தொடர வேண்டும் என்று தனது அடுத்த பட வேலைகளில் இறங்கியிருக்கிறாராம்.
அப்படி அவர் இயக்கவிருக்கும் புதிய படமும் தமிழ், இந்தி என உருவாகிறதாம். அதில் தனுஷ் நடிக்கயிருப்பதாக மணிரத்னம்தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளன. ராஞ்சனா, ஷமிதாப் படங்களுக்குப்பிறகு தனுஷின் இந்தி சினிமா மார்க்கெட் உயர்ந்திருப்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறாராம். தற்போது தனுஷ் விஐபி-2, சூதாடி படங்களில் நடிப்பதால் அந்த படங்களை முடித்ததும் இப்பட வேலைகள் தொடங்குமாம்.
மேலும், புதிய படத்திலும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிசி.ஸ்ரீராம் போன்றோர்களும் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. அதேசமயம், இந்த முறை தென்னிந்திய நடிகை இல்லாமல் ஒரு பாலிவுட் நடிகையே மணிரத்னம் படத்தில் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.