விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
கே.பாக்யராஜ் இயக்கத்தில், அவரது மகன் சாந்தனு நாயகனாக நடித்த படம் சித்து ப்ளஸ்-2. இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாந்தினி. அதன்பிறகு சில படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை அதனால் இன்னமும் அவர் பின்தங்கியே இருக்கிறார்.
இந்த நிலையில், நான் பேசப்படும் நடிகையாகாமல் இருப்பதற்கு நானே காரணமாகி விட்டேன் என்று சொல்லி பீல் பண்ணுகிறார் சாந்தினி. அதுபற்றி அவர் கூறுகையில், விஜயசேதுபதி நடித்த ரம்மி படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வேடத்தில் நான்தான் நடிக்க வேண்டியது. ஆனால், அந்த படத்தில் பெற்ற தந்தையைவே வெட்டி கொலை செய்யும் வேடம் என்பதால் அதில் நடிக்க மறுத்து விட்டேன்.
அதோடு, அந்த நேரத்தில் நகுலுடன் நான் ராஜாவாகப்போகிறேன் என்ற படத்திலும் நடித்து வந்ததால் அந்த படத்தை எதிர்பார்த்தேன. ஆனால் நான் எதிர்பார்த்த படம் தோல்வியடைந்து, நான் நடிக்க மறுத்த ரம்மி படம் ஹிட்டாகி விட்டது. அதனால் நான் நடிக்க வேண்டிய வேடத்தில் நடித்த ஐஸ்வர்யா அதன்பிறகு பேசப்படும் நடிகையாகி விட்டார். ஆக, ஒரு சின்ன தவறு செய்தது எனக்கு பாதகமாகி விட்டது என்று பீல் பண்ணுகிறார் சாந்தினி.
மேலும், அப்போது அப்படி தவறு செய்ததால் இனிமேல் அதிரடியான வேடங்களில் நடிக்க தான் தயாராகயிருப்பதாக சொல்லும் சாந்தினி, சில டைரக்டர்களிடம் வித்தியாசமான வேடங்கள் இருந்தால் சொல்லுங்கள். நான் நடிக்கிறேன் என்று கேட்டு வருகிறார்.