பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கூத்துப்பட்டறை நடிகரான விமல், கில்லி, கிரீடம், குருவி என சில படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது, பசங்க படத்தில் அவரை நாயகனாக்கினார் பாண்டிராஜ். அதன்பிறகு விமலின் நெருங்கிய நண்பரான சற்குணம் அவரை களவாணி படத்துக்கு புக் பண்ணினார். அந்த படமும் மெகா ஹிட் ஆனது. அதனால் அதன்பிறகு தான் இயக்கிய வாகை சூடவா படத்திலும் விமலை நடிக்க வைத்தார் சற்குணம். அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெறவில்லை. என்றாலும், தேசிய விருது படமாக அமைந்தது. அது விமல்-சற்குணம் கூட்டணிக்கு பெரியதொரு அங்கீகாரத்தை கொடுத்தது.
ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையாதபோதும், தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கின்றனர். அதர்வா நடிப்பில் இயக்கியுள்ள சண்டிவீரன் படவேலைகளை முடித்து விட்டதால் அடுத்து விமலை இயக்கும் படத்தின் பாடல் கம்போஸிங்கை தொடங்கி விட்டார் சற்குணம். இந்த படமும் களவாணி பாணியில் கிராமத்து கதையில் உருவாகிறதாம். மேலும், கிராமங்களில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்களை ஒரு கோர்வையாக்கி இயக்கும் சற்குணம், இதுவரை எந்த படங்களிலும் சொல்லப்படாத ஒரு புதிய கதைக்கருவை இந்த படத்தின் கதையாக்கியிருக்கிறாராம். சண்டிவீரன் படம் வெளியானதும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.