Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் விமல்-சற்குணம் கூட்டணி இணைகிறது!

15 ஏப், 2015 - 10:23 IST
எழுத்தின் அளவு:
Vimal---Sargunam-again-unites

கூத்துப்பட்டறை நடிகரான விமல், கில்லி, கிரீடம், குருவி என சில படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வந்தபோது, பசங்க படத்தில் அவரை நாயகனாக்கினார் பாண்டிராஜ். அதன்பிறகு விமலின் நெருங்கிய நண்பரான சற்குணம் அவரை களவாணி படத்துக்கு புக் பண்ணினார். அந்த படமும் மெகா ஹிட் ஆனது. அதனால் அதன்பிறகு தான் இயக்கிய வாகை சூடவா படத்திலும் விமலை நடிக்க வைத்தார் சற்குணம். அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெறவில்லை. என்றாலும், தேசிய விருது படமாக அமைந்தது. அது விமல்-சற்குணம் கூட்டணிக்கு பெரியதொரு அங்கீகாரத்தை கொடுத்தது.


ஆனால் அதன்பிறகு அவர்கள் இணையாதபோதும், தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கின்றனர். அதர்வா நடிப்பில் இயக்கியுள்ள சண்டிவீரன் படவேலைகளை முடித்து விட்டதால் அடுத்து விமலை இயக்கும் படத்தின் பாடல் கம்போஸிங்கை தொடங்கி விட்டார் சற்குணம். இந்த படமும் களவாணி பாணியில் கிராமத்து கதையில் உருவாகிறதாம். மேலும், கிராமங்களில் நடக்கும் சின்னச்சின்ன விசயங்களை ஒரு கோர்வையாக்கி இயக்கும் சற்குணம், இதுவரை எந்த படங்களிலும் சொல்லப்படாத ஒரு புதிய கதைக்கருவை இந்த படத்தின் கதையாக்கியிருக்கிறாராம். சண்டிவீரன் படம் வெளியானதும் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)