பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
மருதுபாண்டியன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம், ''சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது''. பாபி சிம்ஹாவுடன், லிங்கா, பிரபஞ்செயன், சரண்யா, பனிமலர், நிஷா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். சென்னை நகரில் வாழும் பேச்சிலர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்திருந்த படம்.
படம் மீடியாக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த இயக்குனர்களும் பாராட்டி வருகிறார்கள். பாபி சிம்ஹா குறும்படம் என்று விமர்சித்து சம்பளம் தரவில்லை என்ற புகார் அளித்தார். அதனால் ஆரம்பத்தில் ஒரு சில தியேட்டர்களில் வெளியான படம் தற்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதோடு இடைவேளைக்கு பிறகு 10 நிமிட காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளது. மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை ஈட்டித் தரும் என்ற வியாபார வட்டார தகல்கள் தெரிவிக்கிறது.