Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைப்பு மாற்றியது ஏன்? அச்சமின்றி இயக்குனர் விளக்கம்

05 ஏப், 2015 - 11:04 IST
எழுத்தின் அளவு:
Reason-behind-the-title-change-:-Achamindri-movie-director-Rajapandi

என்னமோ நடக்குது படத்துக்கு பிறகு விஜய்வசந்த் நடிக்கும் படம் அச்சமின்றி. அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார், பிரேம்ஜி இசை அமைக்கிறார். சரண்யா, கருணாஸ், தேவதர்ஷினி நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு முதலில் சிகண்டி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அச்சமின்றி என மாற்றி இருக்கிறார்கள். அது ஏன் என்பது பற்றி இயக்குனர் ராஜபாண்டி அளித்த விளக்கம் வருமாறு:


கல்வி துறையில் நடக்கும் முறைகேடுகளை சொல்லும் படம். எந்த மாதிரி கல்வி நாட்டுக்கு தேவை என்பதை சொல்லும் ஆக்ஷன் த்ரில்லர். படத்திற்கு முதலில் சிகண்டி என்று பெயர் வைத்திருந்தோம். சிகண்டி என்பது மகாபாரத்தில் வரும் ஒரு கேரக்டரின் பெயர். திருநங்கையாக இருந்து பின்பு ஆணாக மாறும் கேரக்டர். இந்த தலைப்பு திருநங்கைகளை குறிக்கிறது. ஹீரோ திருநங்கையாக நடிக்கிறாரா என்ற பல சந்தேகங்களை எழுப்பினார்கள். மகாபாரத கதையை முழுமையாக அறிந்தவர்களால் மட்டுமே சிகண்டி கேரக்டர் பற்றி புரிந்து கொள்ள முடியும். எல்லோரும் மாகாபாரத்தை முழுமையாக படித்திருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு சிகண்டி பற்றி அதிக புரிதல் இருக்காது என்பதால் படத்தின் தலைப்பை அச்சமின்றி மாற்றினோம். அச்சமின்றி சிலர் செய்யும் தவறுகளை மக்கள் அச்சமின்றி எதிர்க்க வேண்டும் என்கிற கருத்தையும் கதை வலியுறுத்துவதால் இந்த தலைப்பும் பொருத்தமானதுதான். என்கிறார் ராஜபாண்டி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)