மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' | 'சலார்' டிவி ஒளிபரப்பு : அதிர்ச்சி தந்த டிஆர்பி ரேட்டிங் |
வருகிற 8ந் தேதி உலக மகளிர் தினம். இதையொட்டி தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி அமைப்பின் சார்பில் சாதனை படைத்த பெண்களுக்கு யங் இந்தியா விருது வழங்கும் நிகழ்ச்சி ராணி சீதை அரங்கில் நடந்தது. விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், விமலா ராமன், சலீம் பட நாயகி அக்ஸா, சமூக சேவகி அஸ்வினி அங்காதி ஆகியோருக்கு யங் இந்தியா விருது வழங்கப்பட்டது.
இதில் விருதை நேரில் பெற்றுக்கொண்ட விமலா ராமன் பேசும்போது... "நான் வெளிநாட்டில் வாழும் இந்தியர். ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தேன். என்றாலும் இந்திய கலாச்சாரத்தைதான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். தமிழ் சினிமா என் கலை பயணத்தை துவக்கி வைத்தது. நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த விருதுக்கு நான் தகுதியானவளா என்று தெரியாது. தகுதியாக்கிக் கொள்ள முயற்சிப்பேன்" என்றார். விழாவில் சங்க தலைவர் கே.ஜெகதீஸ்வர ரெட்டி, அப்பல்லோ மருத்துவமனை இயக்குனர்கள் திலீப் ரெட்டி, ப்ரீதா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.