பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி. அதையடுத்து அவரது தயாரிப்பிலேயே ராஜா ராணி என்ற படத்தை ஆர்யா-நயன்தாரா-ஜெய்-நஸ்ரியா ஆகியோரை வைத்து இயக்கினர். அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். அந்த படமும் ஹிட்டாகியது.
அதனால் அதையடுத்து உடனடியாக தனது அடுத்த படத்தை அட்லி இயக்குவார் என்று பார்த்தால் சில மாதங்களாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை. அதன்பிறகுதான் விஜய்யிடம் அவர் சொன்ன கதை ஓகே வாகி விட்டதாகவும், அடுத்த படத்தை விஜய்யை வைத்தே அட்லி இயக்குகிறார் என்றும் அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகின.ஆக, இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கும் அளவுக்கு பெரிய இயக்குனராகி விட்ட அட்லி, சில மாதங்களுக்கு முன்புதான, நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும், சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும் நடித்த ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தேனிலவு கொண்டாட்டங்களை முடித்து விட்டு தற்போது மீண்டும் விஜய் பட வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் தீவிரமாக நடித்துக்கொண்டிருக்கும் விஜய், அந்த படத்தை எப்போது முடிப்பார். எப்போது அட்லியின் இயக்கத்தில் நடிப்பார் என்பது போன்ற செய்திகள் மட்டும் சஸ்பென்சாகவே உள்ளன.