யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! |
டைரக்டர் வீரம் சிவாவுக்கு தெலுங்கிலும் ஒரு மார்க்கெட் உள்ளது. அதனால்தான் தான் தமிழில் இயக்கும் படங்களுக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் கதாநாயகியாக தேடிப்பிடித்து புக் பண்ணுவார். அந்த வகையில் தமிழில் தான் இயக்கிய சிறுத்தை, வீரம் என்ற இரண்டு படங்களிலும் தமன்னாவை நடிக்க வைத்தார். அந்த படங்கள் தெலுங்கிலும் ஓரளவு ஓடியது.
அதனால் மீண்டும் அஜீத்தை இயக்கும் படத்திற்கும் அவர் தமன்னாவைத்தான் புக் பண்ண நினைத்தார். ஆனால், தற்போது தமிழைப் போலவே தெலுங்கிலும் தமன்னாவின் மார்க்கெட் சரிந்துதான் கிடக்கிறது. அதனால் அது ஒர்க்அவுட் ஆகவில்லை.
அதையடுத்து, யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோதுதான் தற்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கும ஸ்ருதிஹாசன் நினைவில் வந்தாராம். தெலுங்கிலும் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் அஜீத், ஏ.எம்.ரத்னம் இருவருமே உடனே ஓகே சொல்லிவிட்டார்களாம்.
அந்த வகையில், அஜீத்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு தற்போதைய நிலவரப்படி ஸ்ருதிஹாசன், சந்தானம் ஆகிய இரண்டுபேர் மட்டுமே உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.