பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் |
அனுஷ்காவின் சினிமா வரலாற்றில் ராணி ருத்ரம்மா தேவி முக்கியமான படம். ஒரு கதாநாயகியை நம்பி 150 கோடியில் தயாராகும் அந்த படத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக நடித்துக்கொண்டிருக்கிறார் அனுஷ்கா. இடையிடையே லிங்கா, என்னை அறிந்தால் மற்றும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தபோதும் அந்த படத்துக்கே அதிகப்படியான நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்து வந்தார்.
அதோடு, அந்த படத்தில் அனுஷ்கா 100 பவுன் நடிகைகளை அணிந்து கொண்டு நடித்தார். அப்படி நடித்தபோது சில மாதங்களுக்கு முன்னர் அந்த நகைகள் படப்பிடிப்பு தளத்தில் இருந்து திடீரென்று காணாமல் போனது. அதனால் படப்பிடிப்பு இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஆனால், பின்னர் அதே 100 பவுன் நகைகளை சென்னையில் இருந்து வாங்கிச்சென்று படப்பிடிப்பை தொடர்ந்தபோது, படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அங்கே கேமராக்கள் பொருத்திதான் படமாக்கப்பட்டதாம். குறிப்பாக, அனுஷ்கா எப்போதுமே பாதுகாப்பு வளையத்துக்குள்தான் இருந்தாராம். அவர் கேரவனுக்குள் சென்றால் கேரவனை சுற்றி கேமராக்களும், செக்யூரிட்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தார்களாம். ஆக, ராணி ருத்ரம்மா தேவி படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பின்போது அனுஷ்கா எங்கு சென்றாலும் டைட் செக்யூரிட்டி வளையத்திற்க்குள்ளேயே இருந்தாராம். அக்கம் பக்கம் அவரால் அசையகூட முடியவில்லையாம். அந்த வகையில், தனது சுதந்திரம் ரொம்பவே பறிக்கப்பட்டதாக அந்த சமயத்தில் பீல் பண்ணினாராம் அனுஷ்கா.