பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளிடம் கடலை போடுவதில் மன்னன் என்று இதுவரை ஆர்யாதான் பெயரெடுத்து வந்தார். தனக்கு முன்ன பின்ன அறிமுகமே இல்லாத நடிகைகளாக இருந்தாலும் இவரே தேடிச்சென்று அவர்களிடம் நட்பு வளர்ப்பார். அதையடுத்து வம்பு வளர்ப்பார் என்றெல்லாம் ஆர்யாவைப்பற்றி விதவிதமான கலாட்டா செய்திகள் கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது நகுலும் அந்த பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளார். தன்னுடன் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் நடித்துள்ள பிந்துமாதவி- ஐஸ்வர்யா தத்தா என்ற இரண்டு நடிகைகளிடமும் அந்த படத்தில் நடித்தபோது அவர் போடாத கடலை இல்லையாம்.
முக்கியமாக தனக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா தத்தாவைதான் ஒரு வழி பண்ணி விட்டாராம். தனக்கான காட்சிகளில் நடித்து முடித்து விட்டு அவர் ரிலாக்சாக உட்கார்ந்து கொண்டிருந்தால், அவரை அழைத்து கண்ட கண்ட விசயஙகளைப்பற்றியெல்லாம் பேசி கடலை போட்டாராம் நகுல். இதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது என்று அவர் கழண்டுகொள்ள நினைத்தாலும், அப்படியெல்லாம் சொல்லக்கூடாது தெரியாத விசயங்களை கேட்டு தெரிஞ்சிக்கணும் என்று சொல்லி மணிக்கணக்கில் அவரிடம் கடலை போட்டு வந்தாராம்.