Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் செய்த தவறை நினைத்து வருந்துகிறேன்; ஆர்த்தி அகர்வால்

16 பிப், 2015 - 10:17 IST
எழுத்தின் அளவு:

சினிமாவுல ஒரு நடிகை அறிமுகமானால் அவரை சுற்றி பல நடிகர்கள் வலை வீசிக் கொண்டிருப்பார்கள். இந்த வலைகளை கடந்து வரும் நடிகைகளே சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடைகிறார்கள். அப்படி சினிமாவில் அறிமுகமான நடிகை ஆர்த்தி அகர்வால் தொடர்ந்து பல ஹிட்டுகளை கொடுத்து டோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் மாறினார். ஆனால் திடீரென இவரும், நடிகர் தருணும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து பல பட வாய்ப்புகளை இழந்தார் ஆர்த்தி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், மகேஷ் பாபு என பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதில் நடிக்காமல் காதலனுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தார், ஆனால் திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.


அதன்பிறகு ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் ஆர்த்தி அகர்வால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசை வந்து பல இயக்குநர்களுக்கு தூதுவிட்டும் இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லையாம், சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்க வேண்டிய நான் செய்த தவறுகளால் இப்போ இந்த நிலைமையில் இருந்து வருந்துகிறேன் என்று கூறியுள்ளாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)