பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சினிமாவுல ஒரு நடிகை அறிமுகமானால் அவரை சுற்றி பல நடிகர்கள் வலை வீசிக் கொண்டிருப்பார்கள். இந்த வலைகளை கடந்து வரும் நடிகைகளே சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அடைகிறார்கள். அப்படி சினிமாவில் அறிமுகமான நடிகை ஆர்த்தி அகர்வால் தொடர்ந்து பல ஹிட்டுகளை கொடுத்து டோலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் மாறினார். ஆனால் திடீரென இவரும், நடிகர் தருணும் காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்து பல பட வாய்ப்புகளை இழந்தார் ஆர்த்தி, சிரஞ்சீவி, வெங்கடேஷ், மகேஷ் பாபு என பெரிய ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அதில் நடிக்காமல் காதலனுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்திக் கொண்டிருந்தார், ஆனால் திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.
அதன்பிறகு ஒரு தொழிலதிபரை மணந்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார் ஆர்த்தி அகர்வால், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டுமென்று ஆசை வந்து பல இயக்குநர்களுக்கு தூதுவிட்டும் இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லையாம், சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்க வேண்டிய நான் செய்த தவறுகளால் இப்போ இந்த நிலைமையில் இருந்து வருந்துகிறேன் என்று கூறியுள்ளாராம்.