Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷை மீண்டும் இயக்கும் செல்வராகவன்!

31 ஜன, 2015 - 09:46 IST
எழுத்தின் அளவு:

தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை படத்தை இயக்கிய செல்வராகவன், அதையடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களையும் இயக்கினார். இதில், முதல் இரண்டு படங்களும் வெற்றி பெற்றபோதும், அடுத்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. அதையடுத்து செல்வராகவனின் படங்களில தனுஷ் நடிக்கவில்லை . இந்த நிலையில், பில்லா-2, சிங்கம்-2, விஸ்வரூபம்-2 என சில படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகியிருப்பதை அடுத்து தனுசுக்கும், தான் நடித்த புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால், இரண்டாம் உலகம் படத்தின் படுதோல்விக்குப் பிறகு அடுத்து யாரை வைத்து படம் இயக்குவது என்பது தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்ற செல்வராகவனிடம், புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை ரெடி பண்ணுமாறு கூறியிருக்கிறாராம் தனுஷ். இதனால் புதிய உற்சாகத்துடன் வரிந்து கட்டி நிற்கிறார் செல்வராகவன். இநதியில் படம் இயக்க வேண்டும் என்கிற கனவும் அவருக்கு இருந்து கொண்டிருப்பதால், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி புதுப்பேட்டை-2 படத்தை தமிழ், இந்தியில் வெளியிட்டு, தனது பாலிவுட் கனவு நனவாக்கி விட வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியுள்ளாராம் செல்வராகவன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)